தூத்துக்குடி இந்துசமய அறநிலைத்துறைக்கு சொந்தமான தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகா் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா 26 ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி வௌ்ளியன்று நடைபெற்ற கும்பாபிஷேக விழாவையொட்டி சிவன்கோவில் தலைமை அர்ச்சகா் செல்வம்பட்டா் தலைமையில் விமானம் கோபுரம் மற்றும் மூலஸ்தானம் பாிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
     
விழாவில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சாமி தாிசனம் செய்து நிகழ்ச்சியில் பங்கேற்றாா். பின்னா் கூறுகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் ஆட்சியில் 2000 க்கும் மேற்பட்ட அறநிலைக்கு சொந்தமான கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதே போல் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் இந்த அரசு மீட்டுள்ளது. இந்துக்களுக்கு ஆதரவாகவே செயல்படும் கட்சியாக திமுக இருந்து வருகிறது. "எல்லோருக்கும் எல்லாம்" என்ற சமத்துவத்தை நாங்கள் உருவாக்கி வளர்த்து வருகிறோம் என்று கூறினாா்.

விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், பெருமாள்கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், வட்டச் செயலாளர் கங்காராஜேஷ், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், அறங்காவலர் குழு உறுப்பினர் மந்திரமூர்த்தி, மற்றும் மணி அல்பட், பக்தா்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனா்.