தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் மற்றும், வட்டாட்சியர் அலுவலகம் குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலரிடமும், புதிய குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) கேட்டு பொதுமக்கள் பலர் விண்ணப்பித்து இருந்தனர். இதனையடுத்து மனுக்களை ஆய்வு செய்து 573 பேருக்கு புதிய ஸ்மார்ட் கார்டுகள் தயார் செய்யப்பட்ட நிலையில் இந்த புதிய ஸ்மார்ட் கார்டினை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சியானது டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து இன்று( 28.06.2025) நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கீதாஜீவன் தலைமையில் குடிமை பொருள் வழங்கல் தாசில்தார் ஞானராஜ் முன்னிலையில் புதிய ஸ்மார்ட் கார்டுகளை பயனாளிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். குடும்ப அட்டைகளை பெற்றுக் கொண்ட பயனாளிகள் அமைச்சர் கீதா ஜீவனுக்கு நன்றி தெரிவித்தனர்.
தொடர்ந்து தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளையாட்டு ஆர்வலர்கள் அமைச்சர் கீதா ஜீவன் இடம் கிரிக்கெட் மற்றும் வாலிபால் உபகரணங்கள் வேண்டுமென கேட்டிருந்த நிலையில், என்.டி.பி.எல் கிரிக்கெட் அணி, 49 வார்டு மூனு சென்ட் பகுதி கிரிக்கெட் மற்றும் வாலிபால் அணி, காவலர் கிரிக்கெட் அணி, வருவாய்த்துறை கிரிக்கெட் அணி உட்பட ஐந்து அணிகளுக்கு கிரிக்கெட் உபகரணங்கள், மற்றும் கைப்பந்து உபகரணங்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். விளையாட்டு உபகரணங்களை பெற்றுக் கொண்ட இளைஞர்கள் அமைச்சர் கீதாஜீவனுக்கு நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பால குருசாமி, குடிமை பொருள் வழங்கல் துறை வருவாய் ஆய்வாளர்கள் ஜெயபிரகாஷ், வெங்கடேஷ், சதீஸ், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், அண்ணாநகர் பகுதி செயலாளர் ரவீந்திரன், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, கவுன்சிலர்கள் சரவணகுமார், வைதேகி, தனலட்சுமி, மாவட்ட பிரதிநிதி நாராயணன், மருத்துவர் அணி மாவட்ட தலைவர் அருண்குமார், பொறியாளர் அணி தலைவர் பழனி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்ட செயலாளர் செந்தில்குமார், பாலு, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் அருணா தேவி, தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, பகுதி ஒருங்கிணைப்பாளர் மார்கின் ராபர்ட், வட்ட பிரதிநிதி பாஸ்கர் மற்றும் அல்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து 573 பயனாளிகளுக்கு புதிய ஸ்மார்ட் கார்டுகளை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி குலையன்கரிசல் கிராமத்தில் காமராஜரின் வெண்கல முழு திருவுருவச் சிலையை பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்!!
அடுத்த
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம் மற்றும் எஸ்.ஆர். இருதய சிகிச்சை மையம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மற்றும் இருதய பரிசோதனை மருத்துவ முகாம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026