தூத்துக்குடியில், அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடியில், பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் முன்னிட்டு மாநகர திமுக சார்பில் காய்கறி மார்க்கெட் எதிரில் உள்ள அண்ணா திருவுருவ சிலைக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாநகர செயலாளர் ஆனந்த் சேகரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கவிதா, முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், மாநகர அயலக அணி செயலாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மண்டல தலைவர் கலைச்செல்வி திலகராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா முருகேசன், சரவணகுமார், விஜயகுமார் பிபி ராமகிருஷ்ணன், பொன்னையன், வட்டச் செயலாளர் கதிரேசன் உட்பட உட்பட கலந்து கொண்டனர்.