தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடிகால் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி பி.எம்.சி பள்ளி முதல் பக்கிள் ஓடை வரையிலும், பால்பாண்டி நகர் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பணிகளின் முன்னேற்றம், தரம், பொதுமக்கள் நலனுக்கான சாலைகள் மற்றும் நீரேற்ற வழிகள் குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் ராமர், வட்ட கழக செயலாளர் மந்திரக்குமார், கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் உடனிருந்தனர்.