தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பி.எம்.சி பள்ளி முதல் பக்கிள் ஓடை வரை நடைபெற்று வரும் இரவு வடிகால் பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

மழை காலத்தை முன்னிட்டு, நகரின் பல்வேறு பகுதிகளில் நீர் தேக்கமின்றி பொதுமக்கள் சிரமமின்றி வாழ்வதை உறுதிப்படுத்தும் விதமாக, மாநகராட்சி சார்பில் இரவு நேரத்திலும் தொடர்ந்து வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பொதுமக்களின் நலனையே முன்னிட்டு முதலமைச்சர் உத்தரவிட்ட பணிகளை விரைந்து நிறைவு செய்ய மாநகராட்சி முழு திறனுடன் செயல்படும் என்று மேயர் தெரிவித்தார்.