தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, பிரதான சாலைகள், சந்திப்புகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் உயரம் குறைவான உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணராஜபுரம் சந்திப்பு மற்றும் திரேஸ்புரம் பகுதிகளில் அமைக்கப்பட உள்ள மின் கோபுர விளக்குகளுக்கான இடங்களை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ. நிர்மல்ராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் இணைந்து கலந்து கொண்டனர்.
மேயர் அவர்கள், பொதுமக்கள் பாதுகாப்பாகவும், சாலைகள் பிரகாசமாகவும் இருந்து, இரவு நேர போக்குவரத்து சிரமம் இல்லாமல் நடைபெறும்வகையில் இந்த மின் கோபுர விளக்குகள் அமைக்கப்படுவதாகவும், விரைவில் பணிகள் நிறைவு பெறும் என்றும் தெரிவித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் உயர்தர மின் கோபுர விளக்குகள் அமைக்கும் பணிகள் – மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கட்டுமானப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விகிதம் குறைக்க வேண்டும் – நாம் இந்தியா் கட்சி மாநில தலைவர் என்.பி. ராஜா வலியுறுத்தல்!!
அடுத்த
ஸ்டெர்லைட் ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் இழப்பீடு கோரி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026