தமிழர்களின் நில வாழ்வும் பண்பாட்டும் இணைந்த பாரம்பரிய மாடுகளை காக்கும் நோக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன், சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பதிவு செய்த வீடியோவும் புகைப்படமும் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
“மண்ணுல விதை விதைக்க மாட்டையே நம்பி இருப்போம்… தெய்வமா அத தொழுது நெற்றியில் பொட்டு வைப்போம்… ஏர் ஓட்ட மாடு இருந்தா ஏழையே இல்லையடா” என்ற வரிகளை உருக்கமாகப் பகிர்ந்த அவர், தமிழர் வாழ்க்கைமுறையில் மாட்டு இனங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
மாடு அருகில் நின்றபடி அவர் பதிவுசெய்திருக்கும் புகைப்படத்தையும், பாரம்பரிய மாடுகளை காப்பதன் அவசியத்தை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு வீடியோவையும் தனது வாட்ஸ்அப் தளத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் இளைஞர்கள் மத்தியில் பாரம்பரிய மாட்டு இனங்களை பாதுகாப்பது குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளதாக சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் எழுந்துள்ளன.
தமிழர் பண்பாட்டு மரபை பாதுகாப்பதில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் மேற்கொண்ட முயற்சி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தூத்துக்குடி
தமிழர் பாரம்பரிய மாட்டை கொண்டாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ASP நடவடிக்கையில் காயம்: மூச்சுத்திணறலால் இந்து முன்னணி செயலாளர் மருத்துவமனையில் அனுமதி!!
அடுத்த
“4 ஆண்டு பசுமை போராட்ட வெற்றியை கொண்டாட வந்தவர்… கேக் வெட்டுவதற்கு முன்பே போலீஸ் கூட்டிச் சென்ற பரபரப்பு!”
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026