தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமையகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.
அதன்படி, கடந்த 15 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பலர் தங்களது தொகுதிகளில் போட்டியிடுவதற்காகவும், எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தியும் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தெற்கு மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், வரும் 23 ஆம் தேதிக்குள் சென்னை எம்.ஜி.ஆர் மாளிகையில் விருப்ப மனு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடியைச் சேர்ந்த அதிமுக மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளரும், தமிழ்நாடு–புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினருமான வக்கீல் மைக்கேல் ஸ்டனிஸ் பிரபு, டூவிபுரத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதனை சந்தித்து வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார். பின்னர், சென்னை எம்.ஜி.ஆர் மாளிகையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது விருப்ப மனுவை அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் வக்கீல் மைக்கேல் ஸ்டனிஸ் பிரபு விருப்பமனு தாக்கல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் விருப்பமனு தாக்கல்!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சியில் ‘அவர் லேண்ட்’ அட்டகாசம்..... தூய்மை பணியாளர் வஞ்சனை – திமுகவுக்கு தலைவலியாகும் பிரச்சனை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026