தூத்துக்குடி மாவட்டம் கூட்டுடன்காடு ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.14.31 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடமும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் நட்புப் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.17.16 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பள்ளி வகுப்பறைக் கட்டடமும் இன்று (22/11/2025) திறந்து வைக்கப்பட்டது.
இந்த இரு புதிய கட்டடங்களையும் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்ப திறந்து வைத்தார்.
நிகழ்வில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
கூட்டுடன்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிறுவர் சிறுமிகளின் கல்வி மற்றும் நலன் மேம்பாட்டிற்கு இந்த புதிய வசதிகள் பெரிதும் உதவும் என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தூத்துக்குடி
கூட்டுடன்காடு ஊராட்சியில் அங்கன்வாடி மையம் மற்றும் புதிய பள்ளி கட்டடத்தை கனிமொழி எம்பி திறந்து வைத்தார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம் புதூர் பள்ளி மாணவி பாலியல் சீண்டல் வழக்கில் குற்றவாளி ஆசிரியரை உடனே கைது செய்ய வேண்டும் – தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் கோரிக்கை!!
அடுத்த
தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம் : தேர்வானவர்களுக்கு கனிமொழி கருணாநிதி நியமன ஆணைகள் வழங்கல்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026