தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி புதூர் கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த அதிமுக, அமமுக, பாஜக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.
வாதலக்கரை அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இருளாண்டி, அதிமுக முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சரவணன், அமமுக வாதலக்கரை ஊராட்சி செயலாளர் K. M. கருப்பாசாமி, அமமுக இடைச்சியூரணி கிளைச் செயலாளர் செல்லப்பாண்டியன், பாஜக கண்ணன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G. V. மார்கண்டேயன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி காளிதாஸ், புதூர் கிழக்கு ஒன்றிய தேர்தல் பார்வையாளர் மருதுபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதியதாக இணைந்த நிர்வாகிகள் மக்கள் நலப்பணிகளில் தங்களை அர்ப்பணிப்பதாகவும், திமுகவின் வளர்ச்சிக்காக உறுதியாக செயல்படுவதாகவும் தெரிவித்தனர்.
தூத்துக்குடி
G. V. மார்கண்டேயன் எம்எல்ஏ முன்னிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் திமுகவில் இணைவு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் கனமழை பாதிப்பு பகுதிகளில் மழைநீர் வெளியேற்றப் பணிகளை கனிமொழி கருணாநிதி நேரில் ஆய்வு!!
அடுத்த
மேயர் ஜெகன் பெரியசாமி ஒருங்கிணைப்பில் மழைநீர் அகற்றம் துரிதம் – பணிகளை நேரில் கண்காணித்து வேகப்படுத்தும் கவுன்சிலர் ரெங்கசாமி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026