கல்லூரிக் கல்வி இயக்குநரகம், திருநெல்வேலி பிரிவு சார்பில் 2025–2026 கல்வியாண்டிற்காக “ஆறு கோடி பனைவிதைகள் நட்டிடும் பனைமரக் காப்பு இயக்கம்” மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரி (தன்னாட்சி) தாவரவியல் துறை சார்பில் கல்லூரி வளாகத்தில் பனைவிதை நடு விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தாவரவியல் துறைத் தலைவர் அருட்சகோதரி முனைவர் ஆரோக்யை ஜெனீசியஸ் அல்போன்ஸ் தலைமையிலாக துறை பேராசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
பனைமரம் சுற்றுச்சூழல் சமநிலைக்கு முக்கிய பங்காற்றுவதாகவும், நீர்வளத்தை பாதுகாக்கும் திறன் கொண்டதாகவும் பேசப்பட்டு, இளம் தலைமுறையில் பனைமரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மேலும், நீர்நிலைகளுக்கு அருகில் வசிக்கும் மாணவிகள் தாவரவியல் துறையிலிருந்து பனைவிதைகளை பெற்றுக்கொண்டு தங்களது பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள், ஓடைகள் அருகில் அவற்றை நட்டிடுமாறு தாவரவியல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இந்த விழா பனைமர வளர்ச்சிக்கான சமூகப் பொறுப்புணர்வை மாணவமணிகளிடையே வளர்த்ததோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கல்லூரியின் உறுதியான பங்கையும் வெளிப்படுத்தியது.
தூத்துக்குடி
பனைமரக் காப்பு இயக்கத்தில் தாவரவியல் துறையின் பங்களிப்பு – செயின்ட் மேரிஸ் கல்லூரியில் பனைவிதை நடு விழா!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அமைச்சர் கீதா ஜீவன் தகவல்: கோவில்பட்டியில் கலைஞர் வெண்கல சிலை திறந்து வைக்க வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
அடுத்த
ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையா – தொடர் திருமண விழாக்களில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026