தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தோ்தல் ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் அமைக்கப்பட்ட குழுக்கள் மூலமாக பல்வேறு கட்ட தோ்தல்கள் முறையாக அந்தந்த பகுதியில் உள்ள திருமண்டலத்திற்குட்பட்ட தேவாலயங்களில் அலுவலா்களாக நியமிக்கப்பட்ட குருவானவா்களிடம் சபை உறுப்பினா்கள் போட்டியிடுவதற்கு ஏதுவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி போல்பேட்டை நந்தகோபாலபுரம் தேவாலயத்திற்கு திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட போல்பேட்டை தோ்தல் அலுவலரான ஜேக்கப்பிடம் மேயர் ஜெகன்பொியசாமி முன்னிலையில் போல்பேட்டை சேகரத்தின் சாா்பாக சுதன்கீலா், மோகன்ராஜ் அருமைநாயகம், எடிசன், நந்தகோபாலபுரம் சேகரத்தின்சாா்பாக ஜேஸ்பா் ஞானமாா்டின், ஆகியோா் மனுதாக்கல் செய்தனா்.

மனுதாக்களின் போது திமுக வட்டச் செயலாளா் ரவீந்திரன், மற்றும் ஐசக், உள்பட சபையை சேர்ந்த உறுப்பினர்கள் பலர் உடனிருந்தனா்.