தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் – ஸ்பிக்நகர் – முள்ளக்காடு நான்குவழிச் சாலையில் அணுகுசாலை இல்லாததால் தொடர்ச்சியாக விபத்துகள் ஏற்பட்டு பல உயிர்கள் பலியானதாக விவசாயி ஜோதிமணி தனது மனுவில் கவலை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் அவர்களுக்கு அனுப்பிய மனுவில்,
சாலையின் இருபுறமும் கடைகள், வணிக வளாகங்கள், குடியிருப்புகள் அதிகமாக இருப்பதால் மக்கள் நெரிசல் அதிகரித்துள்ளது.
தவறான திசையில் வரும் வாகனங்கள் மற்றும் நெரிசலான போக்குவரத்து காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
பள்ளி மாணவர்கள் உட்பட பலர் உயிரிழந்த துயரச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகள் சாலையில் நிறுத்தப்படுவது, மதுக்கடை அருகிலுள்ள கூட்டம், கால்நடைகள் போன்ற காரணங்களும் ஆபத்தை அதிகரித்துள்ளன.
இந்நிலையில், உயிர்ப்பலி மேலும் ஏற்படாமல் இருக்க உடனடியாக அணுகுசாலை அல்லது மேம்பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
“உயிர் இழப்பிற்கு முன் பணமா? உயிரா? என்பதை அரசு முடிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார் விவசாயி ஜோதிமணி.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் உயிர்களை காப்பாற்ற அணுகுசாலை அவசியம் – விவசாயி ஜோதிமணி மனு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பருவமழை முன்னெச்சரிக்கை – தூத்துக்குடி மாநகராட்சி ஆலோசனை கூட்டம்!!
அடுத்த
நாயுடு மகாஜன சங்க செயலாளர் ரெங்கசாமிக்கு மேனேஜிங் டிரஸ்டி விவேகானந்தன் பாராட்டு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026