தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. முகாமினை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மேலும் உடனடியாக தீர்வுகள் காணப்பட்டவர்களுக்கு அதற்கான ஆணைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், "தெற்கு மண்டலத்தில் உள்ள பகுதிகள் 2009 ல் தூத்துக்குடி மாநகராட்சியில் இணைக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எந்த பணிகளும் நடைபெறவில்லை.
ஆனால் தற்போது அனைத்து பணிகளும் விரைவாக நடைபெற்று வருகிறது. மாநகராட்சியில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மக்கள் கோரிக்கைளை ஏற்று குறுகிய பகுதிகளில் கூட சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அனைத்து வார்டுகளிலும் எந்த வித பாரபட்சமும் இன்றி பணிகள் நடக்கிறது. விரைவில் தெற்கு மண்டலத்தில் மகளிர் பூங்கா, மதுகுடிப்போர் மறுவாழ்வு மையம் திறக்கப்பட உள்ளது. திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு முள்ளக்காடு வரையில் உள்ள சாலைகள் செப்பனிடப்பட்டு வருகிறது என்றார்.
முகாமில் துணை ஆணையர் சரவணகுமார், கண்காணிப்பு பொறியாளர் தமிழ்செல்வன், துணை பொறியாளர் சரவணன், நகர்நல அதிகாரி சரோஜா, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மண்டல தலைவர் பாலகுருசாமி, வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், வட்ட செயலாளர் பிரசாந்த், மாமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், விஜயகுமார், சரவணகுமார், பச்சிராஜன், முத்துவேல், ராஜதுரை, வைதேகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் விரைவில் மகளிர் பூங்கா, மது குடிப்போர் மறுவாழ்வு மையம் திறக்கப்பட உள்ளது - மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புதியம்புத்தூர் கிராமத்தில் தூத்துக்குடி முதல் சவரிமங்கலம் வரை புதிய பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பொதுமக்களுடன் பயணம் செய்த சண்முகையா எம்.எல்.ஏ!!
அடுத்த
தூத்துக்குடி மேலச்சண்முகபுரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் கொடை விழாவில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026