நாம் இந்தியர் கட்சியின் மாநில பொருளாளர் பேரூரணி து. ஜெய கணேஷ் இன்று 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நாம் இந்தியர் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சங்கரன் தலைமை தாங்கினார். மேலும் நாம் இந்தியர் கட்சியின் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் சின்னத்துரை, மாநில தொழிற்சங்க தலைவர் செயலாளர் சரவணகுமார்,  மாநிலத் தொழில்நுட்ப அணி செயலாளர் சுந்தர், நல்லாசிரியர் பன்னீர்செல்வம்,  சங்க நிர்வாகிகள் அருள்ராஜ், பிலிப் ராஜ்குமார், ராஜன் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.