தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியின் 50வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.

காலை நிகழ்ச்சியில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி நன்றி திருப்பலியை நடத்தினார். மாலை நடைபெற்ற பொன்விழா விழாவில் சிறப்பு விருந்தினராக மாநில சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்.

அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி வணிகர் சங்கத்தின் அதிபர் மைக்கேல் ராஜேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சி கல்லூரி செயலாளர் அருட்சகோதரி முனைவர் ரோசாலி, முதல்வர் அருட்சகோதரி முனைவர் ரூபா, துணை முதல்வர் முனைவர் எஸ்.எம்.டி. மதுரவல்லி தலைமையில் நடைபெற்றது. மேலும் மதுரை மாகாண தலைவி அருட்சகோதரி முனைவர் ஜாக்லின் பிரகாசம் அவர்கள் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் உரையாற்றி ஆசீர்வாதம் வழங்கினார்.

பொன்விழாவை முன்னிட்டு கல்லூரிக்கு பங்களித்த முக்கிய நற்பணியாளர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். மேலும் ஆரோக்கியம், ஒற்றுமை மற்றும் இளைஞர் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்ட மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன. இதில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.1500 என அறிவிக்கப்பட்டது.

அதோடு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தரவரிசையில் சிறப்பாக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகளுடன் பொன்விழா கொண்டாட்டம் இனிதே நிறைவுற்றது.