தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாமில் காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு 750 பொதுமக்களுக்கு திட்ட பயனாளர் அட்டைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் கீதாஜீவன் கூறியதாவது “திமுக ஆட்சியில் எல்லோரும் எல்லா நன்மைகளும் பெற வேண்டும் என்ற அடிப்படை கொள்கையுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் மக்களுக்காக உழைத்து வருகிறார். உலக அளவிலேயே ‘திராவிட மாடல் ஆட்சி’ இன்று முன்மாதிரியாக பார்க்கப்படுகிறது.
மக்கள் அனைவரும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயன் பெற வேண்டும் என்பதில் அரசு மிகுந்த அக்கறை காட்டுகிறது. ஏற்கனவே அட்டைகள் பெற்றவர்கள் புதுப்பித்துக் கொள்ளவும், புதியவர்கள் விண்ணப்பித்து அடையாள அட்டை பெறவும் முகாம்கள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தை அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மக்களின் குறைகளை என்னிடம் நேரடியாக சொல்லுங்கள் — ஆனால் நிறைவான பணிகளை மற்றவரிடம் கூறுங்கள்! எந்த நேரத்திலும் உங்களுக்காக உதவ தயாராக வடக்கு மாவட்ட திமுக இருக்கிறது. மக்களுக்கு தேவையான சேவைகள் தொடர்ச்சியாக நடைபெறும்.” என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி, சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மணி, அல்பட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
“குறைகளை என்னிடம் சொல்லுங்கள் – நிறைவான பணிகளை மற்றவரிடம் கூறுங்கள்!” : தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் உரை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மின் கம்பத்தில் ஆபத்தான பியூஸ் கேரியர் – குழந்தைகள் பாதுகாப்புக்கு ஆபத்து!
அடுத்த
மக்கள் குரலை மௌனப்படுத்த முயற்சி — நெல்லையில் டாக்டர் வி. சுரேஷ் மீது தாக்குதல்!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026